மாணவர்களுக்கான பரீட்சை அறிவுறுத்தல்கள்
- மாணவர்கள் பரீட்சை ஆரம்பிக்கும் நேரத்திற்கு 15 நிமிடத்திற்கு முன்னராகவே பரீட்சை நிலையத்திற்கு சமூகமளிக்க வேண்டும். பரீட்சை மண்டபத்திற்குள் பரீட்சை ஆரம்பிப்பதற்கு 10 நிமிடத்திற்கு முன்னராக அனுமதிக்கப்படுவார்கள்.
- மாணவர்கள் தங்களது சேர்க்கை வடிவத்தில் பதிவு செய்த தேர்வு மையத்திற்கு மட்டுமே வர வேண்டும். மற்ற தேர்வு மையங்களில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.
- மாணவர் சுட்டெண்ணை உறுதிப்படுத்தியதற்கான மின்னஞ்சலில் மாணவர்கள் தேர்வு மையத்தை உறுதி செய்து கொள்ள முடியும்.
- மேற்பார்வையாளர்களினால் அறிவுறுத்தப்படும் சந்தர்ப்பம் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் மாணவர்கள் கட்டாயமாக ஒரே பரீட்சை மண்டபத்தையே அனைத்து பரீட்சைகளுக்கும் பயன்படுத்த வேண்டும்.
- மாணவர்கள் அனைவரும் பரீட்சை மண்டபம் மற்றும் அங்குள்ள சொத்துக்களுக்கு எந்தவொரு சேதங்களும் ஏற்படாத வண்ணம் மதிப்புடனும் பொறுப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டும்.
- மாணவர்கள் அனைவரும் கட்டாயமாக உறுதிப்படுத்துவதற்காக பரீட்சை நிலையத்திற்கு தேசிய அடையாள அட்டையினை கொண்டுவர வேண்டும்.
- அதிகளவான பரீட்சை நிலையங்களில் வழக்கமான ஆடை அணிவதற்கு அனுமதிக்கப்படும். இருப்பினும் சில பரீட்சை நிலையங்களில் பாடசாலைச் சீருடை கட்டாயமானது. மேலதிக தகவல்களுக்காக உங்கள் பரீட்சை நிலையங்களை தொடர்பு கொள்ளவும்.
- ஒரு பரீட்சையை தவறவிட்டால், மற்ற பரீட்சைகளை எழுத அனுமதி இல்லை.
- பரீட்சை ஆரம்பித்த பின்னர் வருகை தரும் மாணவர்கள் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- மாணவர்களுக்கு தேவையேற்படின் மடக்கை அட்டவணை எடுத்து வருதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. கையடக்கத்தொலைபேசி, கணிப்பான் மற்றும் ஏனைய இலத்திரனியல் சாதனங்களை பரீட்சை மண்டபத்தினுள் எடுத்துச்செல்லல் கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
- ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவாராயின் உடனடியாகப் பரீட்சை மண்டபத்திலிருந்து வெளியேற்றப்படுவர்.
- பரீட்சை நடைபெறும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்குரிய முடிவுகளை Mora Exams 2026 | Examination Committee மேற்கொள்ளும்.
பரீட்சை சுட்டிலக்கதை கண்டறியுங்கள்
உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு உங்கள் சுட்டெண்ணை கண்டறியலாம்
எங்களுடைய Gold அனுசரணையாளர்
எங்களுடைய Silver அனுசரணையாளர்
Made with 💟 by Mora Exams